உலகம் பல சரித்திர நாயகர்களையும், தலைவர்களையும் மற்றும் போராளிகளையும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மொழி, இனம் எல்லைகள் கடந்து உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு போற்றப்படும் அனைத்து தலைவர்களும்
தாங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு துயரத்திற்கு ஆளானவராகவோ அல்லது
மனித இனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழுபவர்களாகவோ இருந்துள்ளனர்
எந்த அளவுக்கெனில் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கை முஹம்மது (ஸல்) அவர்களால் முன்வைக்கப்பட்ட போது அவரைக் கொலை செய்ய வாளேந்தி வந்தவர் தான் இந்த உமர் அவர்கள்.
பின்னாட்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் உமரைப் பற்றி கூறும் போது ‘ உமர் நாவில் இறைவன் பேசுகிறான்’ என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அர்த்தம் இறைவன் நாடினால் உமரின் வரலாறைப் படித்து முடிக்கும் போது அனைவருக்கும் புரிந்துவிடும்.
ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டம், அரேபிய பிரதேசத்தில உள்ள மக்கா நகலில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் ஏகத்துவப் பிரச்சாரத்தை இறைவனின் நாட்டத்தில் துவக்குகிறார்கள்.
முன்னோர்களின் வழிமுறைகளிலும் , மூட நம்பிக்கைகளிலும் ஊறி திளைத்து, மகிழ்ந்து இருந்த அம்மக்களுக்கு, முஹம்மது (ஸல்) அவர்களின் இஸ்லாமிய பிரசாரம் சிந்தனை ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது..அந்த தாக்கம் இஸ்லாத்தின் பால் அவர்களை ஈர்க்கத் தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தார்கள்.
அவர்களில் உமரும் ஒருவர். ஆனால், அவரிடம் பெரிய திட்டமெல்லாம் ஒன்றும் இல்லை. இப்பிரசாரத்தை தடுக்க ஒரே வழி, இது ஆரம்ப கட்டத்திலேயே முடக்கி விட வேண்டியது தான்.
என்னதான் இஸ்லாம் உமரின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவருடைய கோபம் எல்லாவற்றையும் மிகைத்து விட்டது.
Comments
Post a Comment