உலகம் பல சரித்திர நாயகர்களையும் , தலைவர்களை யும் மற்றும் போராளிகளையும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மொழி, இனம் எல்லைகள் கடந்து உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு போற்றப்படும் அனைத்து தலைவர்களும் தாங்கள் நேரடியாகவோ , மறைமுகமாகவோ ஏதோ ஒரு துயரத்திற்கு ஆளானவராகவோ அல்லது மனித இனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழுபவர்களாகவோ இருந்துள்ளனர் ஆனால் இஸ்லாத்திற்கு மட்டுமே இது விதிவிலக்கு. இந்தக் கொள்கையை யார் ஆரம்பத்தில் கண்மூடித்தனமாக எதிர்த்தார்களோ பின்னாட்களில் அவர்களே இந்த கொள்கையை உயிர் மூச்சாக சுவாசித்து இருக்கிறார்கள். அப்படி சுவாசித்தவர்களில் ஒருவர்தான் உமர் அவர்கள். எந்த அளவுக்கெனில் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கை முஹம்மது ( ஸல் ) அவர்களால் முன்வைக்கப்பட்ட போது அவரைக் கொலை செய்ய வாளேந்தி வந்தவர் தான் இந்த உமர் அவர்கள். பின்னாட்களில் முஹம்மது ( ஸல் ) அவர்கள் உமரைப் பற்றி கூறும் போது ‘ உமர் நாவில் இறைவன் பேசுகிறான்’ என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அர்த்தம் இறைவன் நாடினால் உமரின் வரலாறைப் படித்து முடிக்கும் போது அனைவருக்கும் புரிந்துவிடு